தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



உடல் எடை பிரச்னை

Go down

 உடல் எடை பிரச்னை Empty உடல் எடை பிரச்னை

Post by  Sun Mar 31, 2013 11:58 am

குழந்தைகள் கன்னம் குழி விழ சிரிப்பதும், வயதுக்கு மீறிய வளர்ச்சியும்
அழகென கொண்டாடப்படுகிறது. இதனாலேயே ஒல்லியாக இருக்கும் குழந்தைக்கு
எதையாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் இயல்பான
வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், கொழு கொழு குழந்தைகளின் அதிக
எடையை கவனிக்காமல் விடுவதால் அவர்கள் சிறு வயதிலேயே பல்வேறு உடல் நலப்
பிரச்னைகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களை ஆரோக்கியமாக
வளர்ப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் குழந்தைகள் மருத்துவ நிபுணர்
டாக்டர் அருணா விண்ணரசி.

‘‘உலகளவில் 5 வயதுக்கும் குறைவான
குழந்தைகளில் 30 கோடி பேர் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக
ஆய்வுகள் கூறுகின்றன. வளர்ந்த நாடுகளில் அடித்தட்டு மக்களின் குழந்தைகளே
அதிகளவில் குண்டாக இருக்கிறார்கள். இந்தியாவில் உயர்தட்டு மற்றும்
மேல்தட்டு குழந்தைகளே இப்பிரச்னைக்கு ஆளாகிறார்கள். குழந்தைகள், தான்
ஒல்லியா? குண்டா? என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

பெற்றோரின்
கவலைதான் அவர்களுக்கு தவறான உணவுப் பழக்கத்தை வடிவமைக்கிறது. எனவே,
குழந்தையின் வளர்ச்சியில் இருக்கும் மாற்றங்களை அவ்வப்பொழுது
மருத்துவரிடம் தெரிவித்து, அவர் ஆலோசனைப்படி நடப்பதுதான் சிறந்தது.
ஒல்லியோ, குண்டோ, அது பரம்பரைக் காரணங்களால் அமையலாம்.

இயல்பாகவே
ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் எடை அதிகமாக இருக்கும். அளவுக்கு
அதிகமாக சாப்பிடுதல், போதுமான உடற்பயிற்சியின்மை இந்த இரண்டு காரணங்களால்
உடல் எடை கூடும். போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் குறிப்பிட்ட உணவை
மட்டுமே சாப்பிடும் குழந்தை ஒல்லியாக இருக்கும். உடல் பருமன் அதிகமாவதற்கு
லெப்டின் ஜீன் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். லெப்டின் மற்றும்
இன்சுலின் அதிகமாக சுரக்கும் போது குழந்தைகளுக்கு பசிக்கும் தன்மை
குறைகிறது.

குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்வதால்
ஒல்லியாகிறார்கள். குழந்தையின் உடல் எடை குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவோ,
குறைவாகவோ இருக்கும் போது மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான காரணத்தைக்
கண்டறிந்து சரி செய்ய வேண்டும். பரம்பரைக் காரணங்களால், ஒல்லியாக
இருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதில் பெரிய பிரச்னை இருக்காது. சில பெற்றோர்
தங்களது குழந்தை ஒல்லியாக இருக்கிறது, நன்றாக வளர வேண்டும் என்ற
ஆர்வத்தில் எப்போதும் எதையாவது வற்புறுத்தி சாப்பிட வைக்கின்றனர்.

வலிந்து
சாப்பிட வைப்பதால் பசி குறைந்து, சாப்பிடும் அளவும் குறைகிறது. எதைக்
கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோரிடம் சாக்லெட், பிஸ்கெட், பால்...
என குழந்தை தனக்குப் பிடித்ததை மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடும். இதனால்
அதன் பசித்தன்மை குறையும். காய்கள், பழங்கள், கீரை, பருப்பு, சாதம்
போன்றவற்றை தவிர்ப்பதால் போதுமான ஊட்டச்சத்து இல்லாமலேயே குழந்தை வளரும்.

மிரட்டி
சாப்பிட வைப்பதால் உணவு வேளை வந்தாலே குழந்தைகள் டென்ஷன் ஆகிவிடுவார்கள்.
இதுவும் உணவுப் பழக்கத்தை பாதிக்கும். தாய் எதை, எங்கே, எப்படிக்
கொடுப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் எதை, எவ்வளவு
சாப்பிடுவது என்பதில் குழந்தை கவனம் செலுத்தும். எனவே, ஒல்லியான
குழந்தைகளுக்கு வலிந்து உணவு கொடுப்பதைத் தவிர்க்கவும்.

சிறிய
தட்டில், குறைந்த அளவு உணவை, அவர்களாகவே கைகளால் எடுத்துப் பிசைந்து
சாப்பிடும்படி கொடுக்கவும். சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் உணவைக்
கேட்டு வாங்கி சாப்பிடும் வாய்ப்பைத் தர வேண்டும். முழுவதையும்
சாப்பிட்டால் ‘அதை வாங்கித் தருகிறேன், இதை வாங்கித் தருகிறேன்’ என்று
லஞ்சம் தருவதாக உறுதியளிப்பதை விட்டுவிட்டு, சாப்பிடும் போது வேறு
விஷயங்களைப் பேசுவது நல்லது.

பிடித்த உணவைக் கொடுப்பதுடன் புதிய
உணவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். பசியுடன் இருக்கும் போது குழந்தைகள்
புதிய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். பசித்து சாப்பிட
வாய்ப்பளிப்பதன் மூலம் ஒல்லியான குழந்தைகளுக்கும் சரிவிகித சத்துணவு
பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் காய்கள், பழங்கள், கீரைகள்
சாப்பிடும் பழக்கம் தானாக உண்டாகும். தாய் வித்தியாசமான உணவுகளை சமைக்க
கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.

வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரம்
இல்லாமல் ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து, சின்க் போன்ற
தாதுக்களின் குறைபாட்டால் உடல் எதிர்ப்பு சக்தி குறையும். காய்ச்சல், சளி
போன்ற நோய்கள் அடிக்கடி தாக்கும். எப்பொழுதும் சோர்வுடன் காணப்படுவார்கள்.
குறைவாகச் சாப்பிடுவதால் குடல் சுருக்கம் ஏற்படும். கொழுப்பு சத்து
இல்லாததால் பல்வேறு வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளால் இந்தக் குழந்தைகள்
பாதிக்கப்படுவார்கள். சரிவிகித சத்துணவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால்
மலச்சிக்கலையும் எதிர்கொள்வார்கள்.

இவர்களை ஆரோக்கியமான
குழந்தைகளாக மாற்ற உணவில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். குண்டாக
இருப்பதற்கு பரம்பரைக் காரணம் இருந்தாலும், உணவுப் பழக்கம் மூலம் அதை
மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். எடை கூடுவதற்கு கொழுப்பு
சத்து அதிகம் உள்ள உணவுகள், துரித உணவு வகைகள் காரணமாகின்றன. மேலும்,
எந்த விளையாட்டும் இல்லாமல் எப்போதும் படித்துக் கொண்டிருப்பது, டி.வி.
பார்ப்பது, உட்கார்ந்து விளையாடுவதும் இதை அதிகரிக்கிறது.

குழந்தைகளின்
காலை உணவு அனைத்து சத்துகளும் நிறைந்ததாக இருக்க வேண்டும். பள்ளி செல்லும்
குழந்தைகள் முழுமையாக காலை உணவை சாப்பிட்டால்தான் பள்ளியில்
சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மதிய உணவு
மிதமானதாகவும், இரவு உணவு எளிமையாகவும் இருக்க வேண்டும். இங்கே எல்லாமே
தலைகீழாக நடக்கிறது. காலையில் நேரம் இல்லாத காரணத்தால் குழந்தை வெறும்
பால் மட்டும் குடிக்கிறது. மதிய உணவை ஏனோ, தானோ என்று சாப்பிடுகிறது.

மாலை
வீட்டுக்கு வந்ததில் இருந்து, தூங்கப் போகும் வரை எதையாவது கொடுத்து
குழந்தையின் வயிற்றை நிரப்புவதை கண்ணும் கருத்துமாக கவனிக்கிறார்கள்
பெற்றோர். இதனால் குழந்தைகள், தங்களது பசியின் அளவை உணராமல் எவ்வளவு
வேண்டுமானாலும் சாப்பிடும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். உடல் எடை
அதிகரிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி
யால் கட்டுப்படுத்த வேண்டும். கண்டு கொள்ளாமல் விடும் போது சிறு வயதிலேயே
ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது.

கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. தசை
அதிகளவில் சேருவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதிக எடை பிரச்னையால்
மூட்டு வலி ஏற்படும். இதயநோய் தாக்கவும் வாய்ப்பளிக்கிறது. கொழுப்பின்
அளவு அதிகரிப்பதால் மெட்டபாலிக் சிண்ட்ரோம் உண்டாகிறது. இன்சுலின்
சுரப்பியில் வேலை தடைபடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து,
சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை கரு முட்டைப் பையில்
நீர்க்கட்டிகள் உண்டாகவும் இது வாய்ப்பளிக்கிறது.

குண்டான
குழந்தைகளின் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான நேரத்தை முறைப்படுத்த வேண்டும்.
தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பள்ளியிலும்
வீட்டிலும் வெளியில் விளையாட வாய்ப்பளிக்கவும். காலையில் சரிவிகித
சத்துணவைத் தவிர்க்க வேண்டாம். மாலையில் அதிகபட்ச உணவு அளிப்பதைத்
தவிர்க்கவும். துரித உணவுப் பழக்கம் வேண்டாம். பலர், பரம்பரைக் காரணத்தைக்
கூறிவிட்டு, குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பைப் பற்றி கவலை இல்லாமல்
இருக்கின்றனர்.

குழந்தைக்கு பெற்றோர்தான் ரோல் மாடல். குழந்தைகள்
சாப்பிடும் போது பெற்றோரும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
காய்கள் போன்றவற்றை பெற்றோர் தவிர்க்கக் கூடாது. ஐஸ்க்ரீம், சாக்லெட்
போன்றவற்றை முற்றிலும் தடுக்காமல் அளவைக் குறைத்துக் கொடுக்கவும்.
பெற்றோரும் டி.வி., கணினியின் முன் அதிகம் அமர்வதை விட்டுவிட்டு
குழந்தைகளுடன் வெளியில் நேரத்தை செலவளிக்கலாம். சின்னச் சின்ன
உடற்பயிற்சிகளை விளையாட்டுப் போல அவர்களுடன் சேர்ந்து செய்யலாம்.

குழந்தையின்
உடல் எடை சார்ந்த பிரச்னைகளுக்கான சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனைப்படி
எடுத்துக் கொண்டால் ஆரம்பத்திலேயே சரி செய்து விடலாம். குழந்தையின் உடல்
எடை மற்றும் நிறத்தை வைத்து அவர்களை கேலி, கிண்டல் செய்வதைத் தவிர்க்கவும்.
ஒல்லியாகவோ, குண்டாகவோ இருப்பதற்கான காரணத்தை குழந்தைக்கு புரிய
வைக்கலாம். இதன் மூலம் நல்ல மாற்றத்தை எளிதில் அடைய முடியும்.
சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் மிக்க உங்கள் குழந்தை அறிவிலும் சிகரம் தொட
சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள்’’ என்கிறார் டாக்டர்
அருணா விண்ணரசி.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum